Pages

Saturday, 24 September 2011

செ.கதிரேசன் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா

தேவரினப் போராளி  செ.கதிரேசன் அவர்களின்  மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் விழா கடந்த செப்-22 அன்று மதுரை யானைமலை ஒத்தக்கடை SS.மகாலில் நடைபெற்றது.




நினைவுநாளை முன்னிட்டு தேவரினப் பாதுகாப்பு பேரவை-யின் சார்பில் தமிழ்ச் சாதிகளின் சமூகநீதிக்கருத்தரங்கம் நடைபெற்றது.  விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ், பா.ம.க. தலைவர் G.K.மணி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு M.L.A., தனித்தமிழர் சேனை தலைவர் க.நகைமுகன், தமிழ்நாடு தேவர் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் வீ.ராமகிருஷ்ணன், தேசிய பார்வர்ட் பிளாக் தலைவர் ந.பசும்பொன்பாண்டியன், மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் எஸ்.புதுமலர் பிரபாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






Tuesday, 6 September 2011

தேவரினம் தேவையில்லை - மறத்தமிழர் சேனை

  மறத்தமிழர் சேனை (maraththamizhar senai) இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தேவரினம் தேவையில்லை  என்கிற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.




      கள்ளர், மறவர், அகமுடையார், அடையாளங்களை இழக்கசெய்து தேவரினம் என்கிற போர்வையில் மாற்றுசமூகத்தை சார்ந்தவர்களும், கலப்பினவாதிகளும் நம் சமூகத்தை சூறையாட கிளம்பிவிட்டார்கள். அவர்களிடமிருந்து நம் சாதியை காத்துக்கொள்ளவும், அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவும் நாம் நம் நிலையில் அப்படியே தொடர்வதுதான் அறிவார்ந்த நிலைப்பாடு.
                              பிழைப்பு நடத்தும் சில தலைவர்களின் அழங்கார பேச்சில் மயங்கி, அரசு பதிவேட்டில் இல்லாத " தேவரினம் " ஆக நீங்கள் பதிவு செய்துவிட்டால் 'மாதம் மும்மாரி பொழிந்து' உங்கள் வாழ்வு செழித்துவிடப் போவதில்லை. மாறாக உங்களின் கூட்டு எண்ணிக்கை யாரோ ஒருவருக்கு திராவிட கட்சிகளிடம் பேரம்பேச, பணம் பெற உதவியாக இருக்கும் அவ்வளவே, இந்த தேவரினத்தால் உங்களுக்கு விளையபோகும் நன்மை.

மறத்தமிழர் சேனை -யின் மனிதநேய பணி

                    புதுக்கோட்டை மாவட்ட மறத்தமிழர் சேனை இயக்கத்தின் சார்பில், 12.08.2011 வெள்ளிக்கிழமை அன்று மதுரை பிரதான சாலை மாவூர் விலக்கில்  சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர்-தண்ணீர்  பந்தல் அமைக்கப்பட்டது. 
                       மாநில துணைப்பொதுச்செயலாளர் S.M.S.திருப்பதி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கா.ராசு (எ) முருகப்பன் முன்னிலையில் அடுகப்பட்டி V.பழனிச்சாமி அவர்கள் மற்றும் மணிக்காளை அவர்கள்  திறந்து வைத்தார்கள்.












                கடும்வெயிலில் ஆன்மிகபணி மேற்கொண்ட பக்தர்கள் மனநிறைவோடு பயணம் மேற்கொண்டனர்.