Pages

Friday, 9 December 2011

கொல்கத்தா தீ விபத்தில் 90 பேர் பலி : ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையின் உரிமம் பறிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் முதலைமைச்சரான மம்தா பானர்ஜி, கொல்கத்தா தீ விபத்திற்கு காரணமான ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையின் லைசைன்ஸை பறிக்க கோரி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது உத்தரவின்படி, அம்மருத்துவ மனையின் உரிமம் பறிக்கப்பட்டது. இன்று அதிகாலையில் கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 90 பேர் தீக்கிரையாகினர்.

இதனையடுத்து, மீட்பு பணிகளை கண்காணிக்க, சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு வங்காளத்தின் முதலைமைச்சரான மம்தா பானர்ஜி, இத்தனை உயிர்களை இழந்தவர்களின் தவிப்புக்கு நிர்வாகத்தின் பொறுப்பற்றத் தன்மை தான் காரணம் என்றும், மருத்துவமனையில் தீயணைப்புக்கான உபகரணங்கள் வைக்காமல் இருந்ததும் மிக பெரிய குற்றம் என்றார். மேலும், இத்தகைய பொறுப்பற்ற நிர்வாகத்தின் உரிமத்தை பறிக்க உத்தரவு பிறப்பித்ததோடு, ஜாமீன் கிடைக்காத அளவிற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் மறத்தமிழர் சேனை கண்ணீரைக் காணிக்கையாக்குகிறது. maraththamilar senai . 

No comments:

Post a Comment