பின்பு என் குடும்பத்தோடும் கல்லூரி மாணவர்களோடும் இம்மாதிரியான மனிதர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது அப்போது மகிழ்வான ஒன்று. இப்போதும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் திப்புவின் கல்லறை செல்வது வழக்கம்.
அவ்ஓவியங்களே ம.க.இ.க இயக்கம் பயன்படுத்தியது. ராசய்யாவின் நூலை வெகுகாலமாக என் ஓவியங்களை வெகுகாலமாக என் தேவைக்காக தொடர்ந்து படித்து வந்த போதும் பெரிதும் தெரியப்படாத வாராப்புர் ஜமினைப் பற்றி அறிந்து அவர்களின் தியாகத்தை அறிய முடிந்தது. நாடு கடத்தப்பட்ட பொம்மு நாயக்கர் மண்ணிற்க்காக செய்த தியாகத்தை தமிழகம் போற்ற மறந்த விட்டதாகும் – கொண்டாட மறந்து விட்டதாகும் என்று தான் சொல்ல வேண்டும். பல முறை முயற்சித்து கடைசியாக அதைக் கண்டுபிடித்து பொண்ணமாதேவிக்கு அருகில் இருக்கிற அவ்வூரையும் அந்த சிதலமான கோட்டையையும் அங்கு கிடைத்த போர் ஆயுதங்களையும் வளரியையும் அவற்றைப் போற்றி வணங்குகிற அக்கிராமத்தின் அன்பிற்கினிய மக்களையும் கடைசியாக இதற்க்காகவே நானும் எனது நண்பர்கள் வைகறை சந்திரசேகருடன் சென்று தரிசித்து வந்தேன்.
No comments:
Post a Comment