★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. ★ மாவட்ட வாரியாக மறத்தமிழர் சேனை நிர்வாகிகளை பார்க்க மேலே உள்ள பட்டியலை "கிளிக்" செய்யவும். ★

Saturday 29 June 2013

வரலாறு - சாதிகளின் வரலாறு

கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.
முக்குலத்தோர் (தேவர்)
முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
கிளைவழிக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டு கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
பிரம்பூர்நாட்டுக்கள்ளர்
மாகாணக்கள்ளர்

Saturday 27 October 2012

மாவீரர்களின் 211 வது குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 211 வது குருபூஜை விழா 27-10-2012 அன்று மறத்தமிழர் சேனை சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.













எழுச்சிமிக்க கூட்டத்தின் நடுவே மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் 





மேலும் செய்திகள் விரைவில் ஏற்றப்படும்.









Saturday 29 September 2012

pothai illa thamilnadu

pothai ozhippu


avasiyam


vendum


inraiya thinaththil...



intha


vanakkam


ok

Friday 31 August 2012

கமுதியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாளி அடித்து கொல்லப்பட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற  தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி (வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ருக்குமணி இவர்களுக்கு 2 மகன், 5 மகள்கள் உள்ளனர்.

வெள்ளைச்சாமி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். இன்று அதிகாலையில் வெள்ளைச்சாமி வாக்கிக் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். பின்பு அவர் வீட்டில் இருந்தபோது மேலராமநதியை சேர்ந்த தனசீலன் (வயது 42) என்பவர் வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெள்ளைச்சாமியை வெட்டினார். அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு மனைவி ருக்குமணி ஓடிவந்தார். அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டினார்.

சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.  ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவரும் பரிதாபமாக  இறந்தார்.


இதுபற்றிய தகவல் கமுதி போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

முன்னாள் எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட சம்பவம் கமுதி முழுவதும்  பரவியது. அங்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால்  அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Monday 27 August 2012

மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா

அருப்புக்கோட்டை ஒன்றிய , நகர மறத்தமிழர் சேனை சார்பாக நெற்கட்டும்செவ்வேல் மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 297 வது பிறந்தநாள் விழா வருகின்ற செப்-1 அன்று அருப்புக்கோட்டை, மதுரை ரோடு, ராமலிங்கா சமுதாய கூடத்தில் மாலை 5.௦௦ மணியளவில் நடைபெறுகிறது.

பிறந்தநாள் விழாவிற்கு அருப்புக்கோட்டை நகர செயலாளர் ச.லட்சுமணபாண்டியன் அவர்கள்  தலைமை தாங்குகிறார். விழாவில் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள்,  தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை தலைவர் எஸ்.ஆர்.தேவர் அவர்கள்,  தமிழக மக்கள் பார்வர்ட் பிளாக் தலைவர் Dr.சு.மனோகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.


விருதுநகர் மாவட்ட செயலாளர் மு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகிக்க, அருப்புக்கோட்டை நகர தலைவர் ம.இராமலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள். கூட்டத்தில் மாநில துணைப்பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில இளைஞர் சேனை  செயலாளர் ம.கார்த்திக் அவர்கள், மாநில மாணவர் சேனை செயலாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துகுமார் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  செயலாளர் மு.நாகேந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்ட இளைஞர் சேனை  தலைவர் மு.சுப்பிரமணி அவர்கள், விருதுநகர் மாவட்ட மாணவர் சேனை செயலாளர் ம.மாரீஸ்வரன் அவர்கள், விருதுநகர் நகர் செயலாளர் சு.ஹரிபாஸ்கர் அவர்கள், கலந்து கொள்கிறார்கள்.

அருப்புக்கோட்டை நகர் பொருளாளர் ஜெ.செந்தில் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்கள்.



விழா ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர் சு.சரவணன் அவர்கள் , நகர இளைஞர்சேனை தலைவர் ப.சதீஸ்குமார் அவர்கள், நகர இளைஞர்சேனை செயலாளர் எம்.சரவணபாண்டி அவர்கள், ஒன்றிய இளைஞர்சேனை செயலாளர் ர.பாண்டியராஜன் அவர்கள் செய்கிறார்கள்.

Saturday 28 July 2012

viruthunagar

மறத்தமிழர் சேனை "விருதுநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்" 29-07-2012 அன்று மாலை 4.00 மணியளவில் விருதுநகரில் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் M.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாநில அமை...ப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர் T.R.K.மணிகண்டன் அவர்கள், மாநில தொண்டர் சேனை செயலாளர் பசும்பொன் மு.முத்துக்குமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Thursday 5 July 2012

அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயற்குழு


அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைமை செயற்குழு கூட்டமும், இராமநாதபுரம் மாவட்ட அரசியல் ஆலோசனை கூட்டமும் 03-07-2012 அன்று கமுதி தேவர் மகாலில் மாலை 03.00 மணியளவில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் P.V.கதிரவன் M.L.A அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   

கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் M.K.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் R.மாயத்தேவன், திருப்பூர் ராஜசேகர், திண்டுக்கல் ஜெயராமன், கமுதி ராஜேஸ்வரன், முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துவேல், மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் ஆனந்தமுருகன் இராமநாதபுரம் மறவர் முன்னேற்ற சங்கம் தலைவர் முத்துப்பாண்டி, செல்வக்குமார், தெளிச்சாத்தநல்லூர் மாரிசெல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள தெய்வீகத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எவ்வித வளர்ச்சியுமின்றி இருப்பதால் உடனடியாக அரசு தலையிட்டு I.A.S அளவில் நிர்வாக அதிகாரியை நியமித்து பல்வேறு சிறப்பு பாடபிரிவுகள் மற்றும் கட்டிடம் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


              மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களாலும், வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் அவர்களாலும் வழிநடத்தப்பட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியானது, தேவர் தந்த தேவர் P.K.மூக்கையாத் தேவர் அவர்களுக்குப் பிறகு ஒரு திறமையான, வலிமையான தலைவர் இன்றி திணறிவருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் கட்சியான பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதிக்குள் மட்டுமாக முடங்கி போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமெனில் அந்தந்த பகுதிக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும். விரிவான செயல்திட்டமும், செயல் படுத்துவதற்கு ஆனந்தமுருகனைப் போன்ற தன்னலமில்லா போராளிகளையும் உருவாக்க வேண்டும். வலுவான போராட்டங்களும், முறையான நடைமுறை விதிகளும் பின்பற்றப்படாத எந்த இயக்கமும் பின்னடைவை சந்திக்கும் என்பதற்கு பார்வர்ட் பிளாக் முன்னுதாரணம் ஆகிவிட்டது. தற்பொழுது திரு கதிரவன் அவர்கள் உசிலம்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளும் கூட்டணி அரசிலும் அங்கம் வகிக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக முதல்வரிடம் நம் இனம் சார்ந்த, நலன் சார்ந்த முக்கியமான முடிவுகளில் ஒப்புதல் வாங்கிவிடலாம். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அவர்களின் திருநாமத்தை சூட்ட வலியுறுத்தி கடந்த 20 வருடங்களாக போராடிவருகிறோம்.  தமிழக அரசிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவேயில்லை. ஆனால் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தாமலே இம்மானுவேலுவின் சமாதிக்கு 2.60 கோடி பணத்தை பொதுப்பணித்துறை மூலமாக பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட அரசாணையின் மூலமாக, சேதுபதிசீமையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அவர்களின் சிலை அமைக்கப்பட்டு விடும் என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததுதான் முக்கியம்.

     இன்றைய தமிழக அரசு நமது உரிமைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. உண்மையான தியாகிகளுக்கு மதிப்பளிக்கப் போவதுமில்லை. ஆக இந்த குள்ளநரித்தனங்களை தட்டிக்கேட்கும் இடத்திலே இருக்கக்கூடிய தாங்கள் தான் இதனை சீர்செய்திட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுதில் இந்த இயக்கம் தானாகவே வலுப்படத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை” என்று கூறினார்.